×

“இதுவரை தமிழக அரசு கேட்ட நிதியை ஒன்றிய அரசு கொடுத்ததில்லை”: சேலத்தில் எடப்பாடி பழனிசாமி பேட்டி

சேலம்: இதுவரை தமிழக அரசு கேட்ட நிதியை ஒன்றிய அரசு கொடுத்ததில்லை என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், அதிமுக ஆட்சியிலும் ஒன்றிய அரசு நிதி கொடுக்கவில்லை. காங்கிரஸ் மத்தியில் ஆட்சியில் இருந்த போதும், கேட்ட நிதியை கொடுத்ததில்லை. ஒன்றிய அரசில் திமுக அங்கம் வகித்த போதும், கேட்ட நிவாரண நிதி கிடைக்கவில்லை. எப்போதும் கேட்கப்படும் நிதியைவிட குறைந்த அளவு நிதியையே ஒன்றிய அரசு அளிக்கும் என கூறினார்.

The post “இதுவரை தமிழக அரசு கேட்ட நிதியை ஒன்றிய அரசு கொடுத்ததில்லை”: சேலத்தில் எடப்பாடி பழனிசாமி பேட்டி appeared first on Dinakaran.

Tags : Union Government ,Tamil Nadu Government ,Edappadi Palaniswami ,Salem ,AIADMK ,Congress ,
× RELATED நிதி ஒதுக்கீட்டில் தமிழகத்துக்கு...