×

தாய் சாவில் சந்தேகம் உள்ளதாக மகன் புகார் போலீஸ் விசாரணை பெரணமல்லூர் அருகே

பெரணமல்லூர், மார்ச் 7: பெரணமல்லூர் அருகே வயதான தனது தாயார் இறப்பில் சந்தேகம் உள்ளதாக கூறி மூத்த மகன் போலீசில் புகார் அளித்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டம், பெரணமல்லூர் அடுத்த நாராயணமங்கலம் பகுதியை சார்ந்தவர் சாரதாம்மாள்(84). இவரது கணவர் காலமானதை தொடர்ந்து கடந்த சில வருடங்களாக சென்னையில் உள்ள தனது மகன் வீட்டில் வசிக்காமல் தனது மகள் மல்லிகா வீட்டிற்கு வந்து நாராயணமங்கலத்தில் வசித்து வந்தார். இந்நிலையில், வயது மூப்பு காரணமாக நேற்று முன் தினம் இறந்து விட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து சென்னையில் உள்ள அவரது மூத்த மகன் சேகர் என்பவர் இறந்த தனது தாயாரின் உடலை சென்னைக்கு எடுத்துச் சென்று இறுதிச் சடங்கு செய்ய முடிவு செய்துள்ளார். இதற்கு அவரது தங்கை மல்லிகா எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து சேகர் தனது தாயாரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி பெரணமல்லூர் போலீசில் நேற்று புகார் அளித்தார். இந்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்த சாரதாம்மாள் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செய்யாறு அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

The post தாய் சாவில் சந்தேகம் உள்ளதாக மகன் புகார் போலீஸ் விசாரணை பெரணமல்லூர் அருகே appeared first on Dinakaran.

Tags : Peranamallur ,Saradhammal ,Narayanamangalam ,Tiruvannamalai district ,
× RELATED பள்ளிகளில் டிஇஓ ஆய்வு பெரணமல்லூர் வட்டார