×

அடிப்படை வசதிகள் செய்து தர கோரிக்கை

 

விருதுநகர், மார்ச் 6: விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் சிவகாசி நாரணாபுரம் ஊராட்சி 4வது வார்டு உறுப்பினர் கனகலட்சுமி தலைமையில் அளித்த மனுவில், நாரணாபுரம் ஊராட்சி 4வது வார்ட்டில் 300 ஆதிதிராவிடர் குடும்பங்கள் உள்ளன. கடந்த 25 ஆண்டுகளாக அடிப்படை வசதி கிடையாது. ஆதிதிராவிடர் காலனியை சுற்றி உள்ள பகுதிகளில் இருந்து உயிரிழந்தோரின் சடலங்களை காலனி பகுதி வழியாக கொண்டு செல்கின்றனர்.

சடலத்தில் இருந்து பூக்கள், பட்டாசுகளை வீசி செல்கின்றனர். இதனால் மனஉளைச்சல் ஏற்படுகிறது. சடலங்களை எரிக்கும் போது வரும் புகையால் மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. மயானத்தை வேறு பகுதியில் அமைக்க வேண்டும். மாயானத்திற்கு செல்லும் சாலை மாற்றுப்பாதையில் அமைக்க வேண்டும். ஆதிதிராவிடர் பகுதியில் உள்ள 13 தெருக்களுக்கும் சாலை வசதி அமைத்து தர வேண்டுமென தெரிவித்துள்ளனர்.

The post அடிப்படை வசதிகள் செய்து தர கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Virudhunagar ,Sivakasi Naranapuram panchayat 4th ,Kanakalakshmi ,Naranapuram ,panchayat ,Dinakaran ,
× RELATED கோயில் திருவிழாவுக்கு பேனர் வைக்கும்...