×

குழந்தைகள் கடத்தலா? காவல்துறை எச்சரிக்கை

 

மதுரை, மார்ச் 6: மதுரை மாநகர் பகுதிகளில் பெண் போல வேடமிட்ட நபர் ஒருவர் குழந்தைகளை கடத்துவதாக கூறி வாட்ஸ் அப் மற்றும் பேஸ்புக் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் பகிர்ந்து வந்தனர். மேலும் பல்வேறு பள்ளிகளிலும் இதன் உண்மைதன்மை அறியாமல் குழந்தைகளின் பெற்றோரை அச்சுறுத்தும் வகையில், இது போன்ற தகவல் பரவுகிற து, கவனமாக இருக்க வேண்டும் என கூறிவருகின்றனர்.

இந்த தகவல் மதுரை மாவ ட் ட பெற்றோர்களிடை யே கடும் அச்சத்தையும், குழப்பத்தையும் ஏற்படுத்தி வந்தது. இது குறித்து மாநகர காவல்துறை வெளியிட்ட அறிக்கையில், குழந்தை கடத்தல் தொடர்பாக பொய்யான காணொளி பதிவுகள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு, அது பொதுமக்களிடையே தேவையில்லாத அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது மாதிரியான பொய்யான வீண் வதந்திகளை பதிவேற்றம் செய்பவர்கள் மற்றும் பகிர்பவர்கள் சமூக ஊடகப்பிரிவு மூலம் கண்காணிக்கப்பட்டு கடுமையான சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவார்கள் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் இது தொடர்பாக காவல்துறை உதவி எண் 100 அல்லது 112 கட்டணமில்லா தொலைபேசி எண் அல்லது அருகில் உள்ள காவல் நிலையத்தை 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post குழந்தைகள் கடத்தலா? காவல்துறை எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Madurai ,WhatsApp ,Facebook ,Dinakaran ,
× RELATED சீசன் துவங்கியும் மாம்பழங்கள் வரத்து இல்லை