×

குடியிருப்பு பகுதியில் நிறுத்தியிருந்த டூவீலர்களை எரித்தவர்களுக்கு வலை

 

மதுரை, மார்ச் 4: மதுரை, எஸ்.எஸ்.காலனி காவல் நிலையம் எதிரே அமைந்திருக்கும் பழைய காலனி பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இக்குடியிருப்புகளில் வசிப்பவர்கள் தங்கள் டூவீலர்களை வீடுகளுக்கு வெளியே நிறுத்தி வைப்பது வழக்கம். இதன்படி நிறுத்தி ைவக்கப்பட்டிருந்த டூவீல்கள் நேற்று முன்தினம் நள்ளிரவு திடீரென தீப்பிடித்து எரிந்தன. இதைப்பார்த்த பொதுமக்கள் வீடுகளில் இருந்து தண்ணீரை எடுத்து ஊற்றி தீயை அணைக்க முயன்றனர்.

இருப்பினும் ஆறு டூவீலர்கள், 4 சைக்கிள்கள் முற்றிலுமாக எரிந்து சாம்பலாகின. இதன்படி எரிந்து வீணானதில், நேற்று முன்தினம் ஒருவர் புதிதாக வாங்கிய டூவீலரும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இதுபோல் வீடுகளின் முன்பாக நிறுத்தியிருந்த டூவீலர்களை எரித்த மர்ம நபர்கள் குறித்து, எஸ்எஸ் காலனி காவல் நிலையத்தில், அவற்றின் உரிமையாளர்கள் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

The post குடியிருப்பு பகுதியில் நிறுத்தியிருந்த டூவீலர்களை எரித்தவர்களுக்கு வலை appeared first on Dinakaran.

Tags : Madurai ,Madurai, S. S. ,Colony ,Colony Police Station ,Dinakaran ,
× RELATED சீசன் துவங்கியும் மாம்பழங்கள் வரத்து இல்லை