- எருகூர் அரசு பள்ளி
- சீர்காழி
- எருகூர் பஞ்சாயத் யூனியன் மத்திய பள்ள
- மயிலாடுதுறை
- கொல்லிட் மாவட்டம்
- கல்வி அதிகாரி
- சரஸ்வதி
- எருகூர் அரசு பள்ளி
சீர்காழி: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே எருக்கூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா ஓய்வு பெறும் ஆசிரியருக்கு பாராட்டு விழா என முப்பெரும் விழா நடைபெற்றது. கொள்ளிடம் வட்டார கல்வி அலுவலர் சரஸ்வதி தலைமை வகித்தார். ஊராட்சி தலைவர் முத்தமிழ்செல்வி சுப்பையா, வட்டார வளமைய மேற்பார்வையாளர் ஞானப்புகழேந்தி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கோபி சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் மஞ்சுளா வரவேற்றார். பட்டதாரி ஆசிரியர் சசிகலா ஆண்டறிக்கை வாசித்தார். வார்டு உறுப்பினர் ராஜா, பள்ளி மேலாண்மை குழு தலைவர் சுகந்தி, ஆசிரியர் பயிற்றுனர் ஐசக் ஞானராஜ் ஆகியோர் விளையாட்டு போட்டிகள், இலக்கிய மன்ற போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினர். ஓய்வு பெறும் ஆசிரியர் மனோகரனை வாழ்த்தி சிறப்பிக்கப்பட்டார். விழாவில் ஆசிரியர்கள் மீனாட்சி, சாந்தி, உமா கலந்து கொண்டனர். முடிவில் பட்டதாரி ஆசிரியர் மனோகரன் நன்றி கூறினார்.
The post சீர்காழி அருகே எருக்கூர் அரசு பள்ளியில் முப்பெரும் விழா appeared first on Dinakaran.