×

திருத்தணியில் மன அழுத்தத்தால் பெண் தற்கொலை

திருத்தணி: திருத்தணி யில் மன அழுத்தத்தால் பெண் தற்கொலை செய்து கொண்டார். திருத்தணி, சேகர்வர்மா நகர் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி நளினி(38). இவர்களுக்கு திருமணம் நடந்து, 12 ஆண்டுகள் ஆகிறது. 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் நளினி கடந்த சில மாதங்களாக மன அழுத்தம் காரணமாக காஞ்சிபுரம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத போது, மின்விசிறியில் புடவையால் தூக்கு போட்டுக் கொண்டு தற்கொலை செய்துக் கொண்டார். இது குறித்த தகவல் அறிந்ததும் திருத்தணி போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post திருத்தணியில் மன அழுத்தத்தால் பெண் தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Tiruthani ,Thiruthani ,Ramesh ,Sekarvarma Nagar ,Nalini ,
× RELATED தேர்தல் பணிக்கு வந்த துணை ராணுவ படையினருக்கு திருத்தணி போலீசார் விருந்து