- புடவைகாரியம்மன் கோவில்
- கும்பாபிஷேகம்
- மல்லசமுத்திரம்
- கும்பாபிஷேகம்
- விநாயகர்
- புடவைகாரியம்மன்
- வீரகரன்
- எல்லம்மல்
- லிங்கம்மல்
- கன்னிமார்
- சுவாமி
- Elachipalayam
- பொம்மம்பட்டி கிராமம்
- அல்லாலாபுரம்
- கணபதி ஹோமாம்
மல்லசமுத்திரம், பிப்.9: எலச்சிபாளையம் ஒன்றியம், பொம்மம்பட்டி கிராமம், அள்ளாலபுரத்தில் புதிதாக கட்டப்பட்டிருக்கும் விநாயகர், புடவைக்காரியம்மன், வீரகாரன், எல்லம்மாள், லிங்கம்மாள், கன்னிமார் சுவாமிகள் கோயிலில், நேற்று கும்பாபிசேக விழா நடந்தது. இதையொட்டி, நேற்று முன்தினம் காலை 6மணிக்கு கணபதி ஹோமத்துடன் விழா தொடங்கியது. தொடர்ந்து, தீர்த்தம் எடுத்து வருதல், புண்யாகம், வாஸ்துபூஜை, யாகசாலை பிரவேசம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது. நேற்று காலை விநாயகருக்கும், புடவைக்காரியம்மனுக்கும் கும்பாபிசேகம் நடந்தது. இதையடுத்து காட்டுக்கோயில் வீரகாரன் சுவாமிக்கு கும்பாபிசேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
The post புடவைக்காரியம்மன் கோயில் கும்பாபிசேகம் appeared first on Dinakaran.