×

₹80 ஆயிரத்திற்கு தேங்காய் ஏலம்

பரமத்திவேலூர், செப்.25: பரமத்திவேலூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று ₹80 ஆயிரத்திற்கு தேங்காய் ஏலம் நடைபெற்றது. பரமத்திவேலூரில் செயல்பட்டு வரும் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் செவ்வாய்க்கிழமை தோறும் மறைமுக தேங்காய் ஏலம் நடைபெற்று வருகிறது. கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை மிலாடி நபியை முன்னிட்டு விடுமுறை என்பதால் தேங்காய் ஏலம் நடைபெறவில்லை. நேற்று நடைபெற்ற ‌ஏலத்திற்கு 1691 கிலோ தேங்காய்களை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். இதில் அதிகபட்சமாக கிலோ ‌₹52.29க்கும், குறைந்தபட்சமாக ₹30.29க்கும், சராசரியாக ₹49.29க்கும் ஏலம் போனது. மொத்தம் ₹80 ஆயிரத்து 872க்கும் ஏலம் நடைபெற்றது. வரத்து குறைந்து, தேங்காய் விலை உயர்ந்ததால் தென்னை விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

The post ₹80 ஆயிரத்திற்கு தேங்காய் ஏலம் appeared first on Dinakaran.

Tags : Paramathivellur ,Paramathivelur Regulation Hall ,Paramathivelur ,Milady Nabi ,Dinakaran ,
× RELATED பரமத்திவேலூரில் விநாயகர் சிலைகள் ஊர்வலம்