×

மதுரை உசிலம்பட்டி அருகே காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 14 குழந்தைகள் அரசு மருத்துவமனையில் அனுமதி..!!

மதுரை: மதுரை உசிலம்பட்டி அருகே காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 14 குழந்தைகள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று ஒரே நாளில் 4 குழந்தைகள் உசிலம்பட்டி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உசிலம்பட்டி மருத்துவமனையில் 8 பேரும், மதுரை ராஜாஜி மருத்துவமனையில் 2 பேரும் ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ளனர். மொக்கத்தான்பாறை மலைக்கிராமத்தில் காய்ச்சல் பரவும் சூழலில் குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

The post மதுரை உசிலம்பட்டி அருகே காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 14 குழந்தைகள் அரசு மருத்துவமனையில் அனுமதி..!! appeared first on Dinakaran.

Tags : Madurai Usilampati ,Madurai ,Usilampati ,Usilampati Hospital ,Usilampatty Hospital ,Madurai Rajaji Hospital ,Dinakaran ,
× RELATED சீசன் துவங்கியும் மாம்பழங்கள் வரத்து இல்லை