×

புயல் நிவாரணமாக சென்னைக்கு மட்டும் ரூ.500 கோடி ஒதுக்கீடு : உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் தகவல்

டெல்லி : புயல் நிவாரணமாக சென்னைக்கு மட்டும் ₹500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் தெரிவித்துள்ளார். வெள்ள பாதுகாப்புக்காக புதிய திட்டங்களை சென்னையில் மத்திய அரசு செயல்படுத்தியுள்ளது என்றும் தமிழ்நாடு அரசின் குழு வரும் முன்னர் மத்திய அரசின் குழு சென்றது என்றும் இணையமைச்சர் நித்யானந்த் குறிப்பிட்டார். மேலும் வெள்ள சேதத்தை பார்வையிட பாதுகாப்பு அமைச்சரை பிரதமர் அனுப்பிவைத்தார் என்றும் உள்துறை இணை அமைச்சர் கூறினார்.

The post புயல் நிவாரணமாக சென்னைக்கு மட்டும் ரூ.500 கோடி ஒதுக்கீடு : உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் தகவல் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Minister of State for Home Affairs ,Nithyanand ,Delhi ,central government ,Tamil Nadu government ,
× RELATED சென்னையில் ஆன்லைன் வர்த்தகம் என கூறி...