×

காதல் திருமணம் செய்த வாலிபர் தற்கொலை

கிருஷ்ணகிரி, பிப்.6: ராயக்கோட்டை கொப்பக்கரை அருகேயுள்ள சிங்காரப்பேட்டையைச் சேர்ந்தவர் சிவன்(30). இவரது மனைவி பார்வதி (25). இருவரும் கடந்த 9 வருடத்திற்கு முன், காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கணவன், மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த 20 நாட்களுக்கு முன் ஏற்பட்ட தகராறின் போது, பார்வதி கோபித்துக் கொண்டு அதே பகுதியில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார். கடந்த 29ம் தேதி, மாமியார் வீட்டுக்கு சென்ற சிவன் மனைவியை குடும்பம் நடத்த வருமாறு அழைத்த போது, அவர் வர மறுத்து விட்டார். இதனால் வீட்டுக்கு திரும்பிய சிவன், வீட்டில் விஷம் குடித்து விட்டு மயங்கினார். அவரை குடும்பத்தினர் மீட்டு, தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பலனின்றி, அவர் நேற்று முன்தினம் உயிரிழந்தார். இதுபற்றி ராயக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post காதல் திருமணம் செய்த வாலிபர் தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Krishnagiri ,Shivan ,Singarappettai ,Rayakottai Koppakkarai ,Parvati ,
× RELATED ஊத்துக்கோட்டை அருகே சிவன் கோயில்களில் பிரதோஷ விழா