×

அரசு பள்ளி அருகே புகையிலை விற்றவர் கைது

விருதுநகர், ஜன.25: அரசு தொடக்கப்பள்ளி அருகில் உள்ள கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனையில் ஈடுபட்டவரை போலீசார் கைது செய்தனர். விருதுநகர் அருகே உள்ளது கே.உசிலம்பட்டி கிராமம். இங்கு அரசு தொடக்கப் பள்ளி உள்ளது.

இதன் அருகில் உள்ள கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, விருதுநகர் ஊரக காவல் நிலைய சார்பு ஆய்வாளர் அங்காளீஸ்வரன் தலைமையிலான போலீசார் பள்ளி அருகே உள்ள பிச்சைக்கனி(46) என்பவரின் கடையில் சோதனை நடத்தினர்.

அப்போது, அங்கு 300 புகையிலை பாக்கெட்டுகள் இருப்பது கண்டறியப்பட்டது.அவரிடமிருந்து புகையிலைப் பொருட்களை கைப்பற்றிய ஊரக காவல்நிலைய போலீசார் வழக்குப் பதிந்து பிச்சைக்கனியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

The post அரசு பள்ளி அருகே புகையிலை விற்றவர் கைது appeared first on Dinakaran.

Tags : Virudhunagar ,Primary School ,K. Usilambatti ,Dinakaran ,
× RELATED கோயில் திருவிழாவுக்கு பேனர் வைக்கும்...