- சைக்கிள் விழிப்புணர்வு
- விஷிகா ஜனநாயக மாநாட்டை வெ
- சட்டமன்ற உறுப்பினர்
- பாபு
- சேயூர்
- விடுதலை புலிகள் கட்சி
- வெற்றி ஜனநாயகக்
- திருச்சி
- திருமாவளவன்
- செங்கல்பட்டு தெற்கு மாவட்டம்
- விஷிக்
செய்யூர்: விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வெல்லும் ஜனநாயகம் மாநாடு திருச்சியில் வரும் 26ம் தேதி கட்சி தலைவர் திருமாவளவன் தலைமையில் நடைபெற உள்ளது. இந்த மாநாடு குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், செங்கல்பட்டு தெற்கு மாவட்ட விசிக சார்பில், செய்யூரில் இருசக்கர வாகன பேரணி நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு, மாவட்ட செயலாளர் தமிழினி தலைமை தாங்கினார். முன்னாள் மாவட்ட செயலாளர் ஆதவன் முன்னிலை வகித்தார். ஒன்றிய செயலாளர் கார்வேந்தன் அனைவரையும் வரவேற்றார். செய்யூர் சட்டமன்ற உறுப்பினர் பனையூர் பாபு கலந்து கொண்டு பேரணியை தொடங்கி வைத்தார். தொடர்ந்து செய்யூரில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து ஊர்வலமாக நடந்து சென்று, பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கி, மாநாடு குறித்த விழிப்புணர்வு கூட்டத்திலும் கலந்து கொண்டு பேசினார். இதனைத்தொடர்ந்து, இருசக்கர வாகனங்களுக்கு மாநாடு குறித்த ஸ்டிக்கர்களை எம்எல்ஏ பனையூர் பாபு ஒட்டினார். இந்நிகழ்ச்சியில், விடுதலை அரசு, திருமாறன், செந்தமிழ்வளவன், பூகாஓவியர், புகழேந்தி, புரட்சிமாறன், தமிழ்விரும்பி, அகிலன், எழில்ராவணன், ஓவியர் அரசு, ஜீவகன், பொறையூர் வினோத், அகர முரளி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
The post விசிக வெல்லும் ஜனநாயகம் மாநாடு குறித்து இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி: எம்எல்ஏ பாபு பங்கேற்பு appeared first on Dinakaran.