- கோயம்புத்தூர்
- ஸ்ரீ சக்தி வேலன் திருவிழா
- ஸ்ரீ சக்தி பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கால
- எல்&டி பைபாஸ் ரோடு, கோயம்புத்தூர்
- கார்த்திக் நாராயணசாமி
- பொங்கல்
கோவை, ஜன.8: கோவை எல் அண்ட் டி பைபாஸ் ரோட்டில் உள்ள ஸ்ரீசக்தி பொறியியல் மற்றும் தொழில் நுட்பக்கல்லூரி சார்பில் ஸ்ரீ சக்தி வேளான் திருவிழா 2 நாட்கள் நடைபெற்றது. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் நாராயணசாமி துவக்கிவைத்தார். இதில் காங்கயம் கால்நடை கண்காட்சி, நாட்டு நாய் கண்காட்சி, ரேக்ளா பந்தயம், தமிழ் நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள், வேளாண் பொருட்கள் கண்காட்சி எனபல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
ரேக்ளா போட்டியில் பல்வேறு பிரிவுகளில் 500க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகள் பங்கேற்றன. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு கோவை மாநகர காவல் துணை கமிஷனர் (போக்குவரத்து) எம்.ராஜராஜன் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். இதில், 1,000க்கும் மேற்பட்ட காங்கயம் காளைகள், காங்கயம் மாடுகள், சண்டை ஆடுகள், நாட்டு நாய்கள் பங்கேற்றன. ஒயிலாட்டம், புலியாட்டம், வள்ளிகும்மி, பறை, பரதநாட்டியம், கரகாட்டம் போன்ற தமிழ்நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளை பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.
The post ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு டோக்கன் விநியோகம் துவங்கியது appeared first on Dinakaran.