- சென்னை
- தமிழ்நாடு அரசு
- திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர்
- அருள்
- அத்திப்பாடி
- கிருஷ்ணகிரி மாவட்டம்
- உத்தங்கரை வட்டம்
- அரசு.
சென்னை: தமிழ்நாடு அரசு வெளியிட்ட அரசாணையில்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டம், அத்திப்பாடி கிராமத்தில் வசிக்கும் விவசாயி அருள் (45) என்பவரை குண்டர் சட்டத்தில் வைக்க திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். மேலும் அரசால் ஒப்புதல் வழங்கப்பட்டது. அறிவுரைக் குழுமம், குண்டர் சட்டத்தில் வைக்க போதிய காரணங்கள் உள்ளதாக தெரிவித்துள்ளது. குண்டர் சட்டத்தில் வைக்கப்பட்டுள்ள அருள் என்பவரை விடுவிக்கக் கோரி பல்வேறு தரப்பினரிடமிருந்து கோரிக்கைகள் வரப்பெற்றுள்ளன. அக்கோரிக்கைகளை முதல்வர் கனிவுடன் பரிசீலினை செய்து குண்டர் சட்டத்தில் சிறையில் உள்ள அருள் மீது பிறப்பிக்கப்பட்டுள்ள குண்டர் தடுப்பு சட்டம் ஆணையினை ரத்து செய்யுமாறு ஆணையிட்டுள்ளார். முதல்வரின் ஆணைக்கிணங்க அருள் என்பவருக்கு எதிராக திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரால் பிறப்பிக்கப்பட்ட குண்டர் தடுப்பு சட்டம் ரத்து செய்ய முடிவு செய்து அரசு ஆணையிடுகிறது.
The post விவசாயி மீதான குண்டர் சட்டம் ரத்து appeared first on Dinakaran.