- KU
- கே
- மத்திய அமைச்சர்
- எல்.முருகன்
- தில்லி
- முன்னாள்
- சட்டமன்ற உறுப்பினர்
- கே. க.
- யூனியன்
- செல்வ மேலாண்மை அமைச்சர்
- கே. எல். ஏ.
- முருகன்
- திமுக்காவின்
- அலுவலக செயலாளர்
- சென்னை
டெல்லி: முன்னாள் எம்எல்ஏ கு.க.செல்வம் மறைவுக்கு ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் இரங்கல் தெரிவித்துள்ளார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற கு.க.செல்வம் காலமானார் என்ற செய்தி வருத்தம் அளிக்கிறது என எல்.முருகன் கூறியுள்ளார்.
திமுகவின் தலைமை நிலைய செயலாளரும், 2016ம் ஆண்டு சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியின் உறுப்பினராகவும் கு.க. செல்வம் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2016 முதல் 2021 வரை திமுகவின் சட்டமன்ற உறுப்பினராக செயல்பட்டு வந்தார்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக கு.க. செல்வம் தீவிர உடல்நலக்குறைவு காரணமாக சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். மேலும் அவர் தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணிப்பில் இருந்து வந்துள்ளார். இதையடுத்து கு.க. செல்வம் இன்று காலை மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
கு.க. செல்வம் மறைவிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உட்பட பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் கு.க.செல்வம் காலமானார் என்ற செய்தி வருத்தம் அளிக்கிறது என ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளதாவது; “முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கு.க.செல்வம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி காலமானார் என்ற செய்தி மிகவும் வருத்தம் அளிக்கிறது. அவர் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவர் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
The post மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற கு.க.செல்வம் காலமானார் என்ற செய்தி வருத்தம் அளிக்கிறது: ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் இரங்கல் appeared first on Dinakaran.