×

சொர்க்க வாசல் திறப்பு விழா

க.பரமத்தி, டிச.24: க.பரமத்தி வரதராஜபெருமாள் கோயிலில் சொர்க்க வாசல் திறப்பு விழா நடைபெற்றது. சுற்றுப்பகுதி பக்தர்கள் தரிசனம் செய்தனர்.கரூர் மாவட்டம் க.பரமத்தி ஒன்றியம், க.பரமத்தி கடைவீதியில் விநாயகர், தேவி பூதேவி சமேத வரதராஜபெருமாள் கோயில் உள்ளது. இங்கு அமாவாசை, பவுர்ணமி உள்ளிட்ட முக்கிய விரத நாட்களில் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வருகிறது.நேற்று 9ம் ஆண்டு வைகுண்ட ஏகாதசி விழாவிற்காக அதிகாலை 3 மணிக்கு விஷ்வசகஸ்ரநாமம் பாராயணமும்,தொடர்ந்து பால், பன்னீர், சந்தனம், இளநீர், தேன், கரும்புச்சாறு போன்ற 18 வகை மூலிகை பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு உற்சவர் திருமஞ்சனம் நடத்தப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் தேவி பூதேவி சமேத வரதராஜபெருமாள் அருள் பாலித்தார். தொடர்ந்து 5மணிக்கு சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. சாமிஉலா வருதல், மகா தீபாராதனை செய்யப்பட்டு, இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம் பிரசாதம் வழங்கப்பட்டது.

The post சொர்க்க வாசல் திறப்பு விழா appeared first on Dinakaran.

Tags : Paramathi ,Heaven's Gate ,Paramathi Varadarajaperumal Temple ,darshan.Karur ,
× RELATED க.பரமத்தி அருகே மது பாட்டில் பதுக்கிய பெண் உள்பட 2 பேர் கைது