×

எம்ஜிஆரின் நினைவு நாளையொட்டி ஓபிஎஸ் அஞ்சலி செலுத்துகிறார்

சென்னை: எம்ஜிஆரின் 36ம் ஆண்டு நினைவு நாளையொட்டி வருகிற 24ம் தேதி அவரது நினைவிடத்தில் ஓ.பன்னீர்செல்வம் மலர்தூவி அஞ்சலி செலுத்துகிறார். இதுகுறித்து முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: அதிமுக நிறுவனர், முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 36ம் ஆண்டு நினைவு நாளான வருகிற 24ம் தேதி (ஞாயிறு) காலை 10 மணிக்கு சென்னை, மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் மலர்தூவி அஞ்சலி செலுத்தப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post எம்ஜிஆரின் நினைவு நாளையொட்டி ஓபிஎஸ் அஞ்சலி செலுத்துகிறார் appeared first on Dinakaran.

Tags : OPS ,MGR ,Chennai ,O. Panneerselvam ,
× RELATED முல்லை பெரியாறு அணை விவகாரம் கேரள அரசுக்கு ஓபிஎஸ் கண்டனம்