×

எண்ணெய் கசிவு ஏற்பட்டதற்கு சிபிசிஎல் ஆலை நிர்வாகமே காரணம்: பசுமை தீர்ப்பாயத்தில் தமிழ்நாடு அரசு தகவல்

சென்னை: எண்ணெய் கசிவு ஏற்பட்டதற்கு சிபிசிஎல் ஆலை நிர்வாகமே காரணம் என பசுமை தீர்ப்பாயத்தில் தமிழ்நாடு அரசு தகவல் தெரிவித்துள்ளது. சென்னை எண்ணூர், மணலி பகுதியில் வெள்ள நீரில் கச்சா எண்ணெய் கலந்தது தொடர்பான வழக்கு தீர்ப்பாயத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. சிபிசிஎல் ஆலை அதிகப்படியான எண்ணெயை சேமித்து வைத்ததே எண்ணெய் கசிவுக்கு காரணம். டிச.3 முதல் 5-ம் தேதி வரை 3 நாட்கள் எண்ணெய் கசிவு நடந்துள்ளது. டிச.7-ல் எண்ணெய் கசிவு தொடர்பாக ஆய்வு நடத்தப்பட்டது. எண்ணெய் கலப்பு தெரிந்தவுடனே நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் உத்தரவிட்டார் என தீர்ப்பாயத்தில் தமிழ்நாடு அரசு தகவல் தெரிவித்துள்ளது.

The post எண்ணெய் கசிவு ஏற்பட்டதற்கு சிபிசிஎல் ஆலை நிர்வாகமே காரணம்: பசுமை தீர்ப்பாயத்தில் தமிழ்நாடு அரசு தகவல் appeared first on Dinakaran.

Tags : Tamil ,Nadu ,Green Tribunal ,Chennai ,Tamil Nadu government ,CBCL ,Dinakaran ,
× RELATED அமோனியா வாயு கசிவு வழக்கில் உரிய...