×

பெண்கள், குழந்தைகளுக்கான பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

போடி, டிச. 9: போடியில் அரசினர் பொறியியற் கல்லூரி சார்பில் இளைஞர் செஞ்சிலுவை சங்கத்தின் மூலம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது. பேரணியை கல்லூரி முதல்வர் வசந்த நாயகி தலைமை வகித்து, துவக்கி வைத்தார். இதில் 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

இதில் பங்கேற்றவர்கள் பெண் கல்வியை ஊக்குவித்தல், குழந்தை திருமணத்தை தடை செய்தல் தொடர்பான வாசகங்கள் நிறைந்த விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி, முழக்கமிட்டபடி சென்றனர். கல்லூரி வளாகத்தில் துவங்கிய பேரணி, தர்மத்துப்பட்டி கிராமத்தில் முடிவடைந்தது. பின்னர் கிராமமக்களிடம் இன்றைய கால சூழ்நிலை குறித்து மாணவ, மாணவிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மாணவ ஒருங்கிணைப்பாளர்கள் ரசிகா, அபிராமிலக்ஷ்மி ஆகியோர் பேரணியை வழி நடத்தினர். ஏற்பாடுகளை இளைஞர் செஞ்சிலுவை சங்க ஒருங்கிணைப்பாளர்கள் குபேரராஜா, செந்தில் செய்திருந்தனர்.

The post பெண்கள், குழந்தைகளுக்கான பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி appeared first on Dinakaran.

Tags : Boddy ,Youth Red Cross Society ,Royal College of Engineering ,Bodhi ,Women, Kids Safety Awareness Rally ,Dinakaran ,
× RELATED தேர்தல் விழிப்புணர்வு பேரணி