×

தேர்தல் விழிப்புணர்வு பேரணி

போடி, ஏப். 4: நாடாளுமன்ற தேர்தலில் 100 % வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி போடி நகராட்சி சார்பில் விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. நகராட்சி கமிஷனர் ராஜலட்சுமி தலைமை வகித்து துவக்கி வைத்தார். இப்பேரணி, எனது வாக்கு எனது உரிமை என்ற பதாகைகளை ஏந்தி கொண்டு கட்டபொம்மன் சிலை, வள்ளுவர் சிலை, நகர் காவல் நிலையம் வரை சென்றது. தொடர்ந்து முன்னதாக நகராட்சி வளாகத்தில் அனைவரும் கைகளை உயர்த்தி தூக்கி 100% வாக்களிப்போம் என உறுதிமொழியும் எடுத்துக் கொண்டனர். இதில் மகளிர் திட்டம் உதவி திட்ட அலுவலர் கங்கா கௌரி, மேலாளர் முனிராஜ், பொறியாளர் குணசேகரன், கவுன்சிலர்கள், பணியாளர்கள் என பலரும் சென்றனர்.

The post தேர்தல் விழிப்புணர்வு பேரணி appeared first on Dinakaran.

Tags : Boddy ,Bodi ,Municipal Commissioner ,Rajalakshmi ,Election Awareness Rally ,Dinakaran ,
× RELATED போடி ராசிங்காபுரத்தில் மலைபோல் மண் குவிப்பால் மக்கள் சிரமம்