×

நடிகை பலாத்கார காட்சிகள் வெளியான விவகாரம் தடயவியல் பரிசோதனை நடத்த கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு

திருவனந்தபுரம்: கேரளாவைச் சேர்ந்த பிரபல மலையாள நடிகை கடந்த 2017ம் ஆண்டு திருச்சூரில் இருந்து எர்ணாகுளத்திற்கு இரவில் காரில் செல்லும்போது ஒரு கும்பலால் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது அவரது முன்னாள் டிரைவரான சுனில்குமார் என்பவர் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர். பிரபல மலையாள முன்னணி நடிகர் திலீப் சதித்திட்டம் தீட்டியது தெரியவந்தது.

இதையடுத்து அவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.இதற்கிடையே நடிகை பலாத்கார காட்சிகள் வெளியானது. இதுதொடர்பாக தாக்கல் செய்த மனு மீது கேரள உயர்நீதிமன்றத்தில் நேற்று விசாரணை நடைபெற்றது.அப்போது மெமரி கார்டை தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பி ஒரு மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய எர்ணாகுளம் மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டது.

The post நடிகை பலாத்கார காட்சிகள் வெளியான விவகாரம் தடயவியல் பரிசோதனை நடத்த கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Kerala High Court ,Thiruvananthapuram ,Kerala ,Thrissur ,Ernakulam ,
× RELATED சொத்து விவரங்கள் மறைத்த ஒன்றிய...