×

அம்பேத்கரின் நினைவு தினம்: எம்எல்ஏக்கள் மாலை அணிவித்து மரியாதை


திருவள்ளூர்: டாக்டர் அம்பேத்கரின் நினைவு தினத்தை முன்னிட்டு எம்எல்ஏ க்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். டாக்டர் அம்பேத்கரின் நினைவு தினத்தை முன்னிட்டு பூந்தமல்லி ஒன்றியம் ஆண்டர்சன் பேட்டை பூவை மூர்த்தியார் திடலில் உள்ள சிலைக்கு புரட்சி பாரதம் கட்சித் தலைவர் பூவை எம்.ஜெகன் மூர்த்தி எம்எல்ஏ அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் மாநில நிர்வாகிகள் காமராஜ், கூடப்பாக்கம் குட்டி, ரகுநாத், மதிவாசன், ஏகாம்பரம், சிவராமன், அஜித் உள்பட பலர் உடன் இருந்தனர். இதேபோல் திருவள்ளூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு மேற்கு மாவட்ட திமுக ஆதிதிராவிடர் நல அணி மாவட்ட நிர்வாகிகள் நகர மன்ற உறுப்பினர் செல்வகுமார், பாலகிருஷ்ணன் ஆகியோர் ஏற்பாட்டில் மாவட்ட செயலாளர் திருத்தணி எஸ்.சந்திரன் எம்எல்ஏ, வி.ஜி.ராஜேந்திரன் எம்எல்ஏ ஆகியோர் மரியாதை செலுத்தினர்.

இதில் ஆதிசேஷன், கே.திராவிட பக்தன், குமரன், நகரச் செயலாளர் ரவிச்சந்திரன், நகர மன்ற தலைவர் உதய மலர் பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர். திருவள்ளூர் ஆயில்மில் பகுதியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு அதிமுக மாவட்டச் செயலாளர் பி.வி.ரமணா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் நகர செயலாளர் ஜி.கந்தசாமி, நிர்வாகிகள் ராஜி, எழிலரசன், ஞானகுமார், ஜோதி, பாலாஜி, குமரேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் விடுதலை சிறுத்தைகள் சார்பில் மாவட்ட செயலாளர் தளபதி சுந்தர் மாலை அணிவித்தார். இதில் எஸ்.கே. குமார், செந்தில், ஈசன், எட்டி, ஷியாம், பரத், நாகராஜ், பாலாஜி, சத்யராஜ், திலக், அம்பி, முத்துவளவன் உள் ளிட்டோர் பங்கேற்றனர்.

காங்கிரஸ் நகர தலைவர் ஜோஷி பிரேம் ஆனந்த் தலைமையில் மாவட்ட முதன்மை தலைவர் தளபதி மூர்த்தி, பாபி, பிரவீன் கார்த்திக், பிரேம்குமார், பாலா, சரத்குமார், முகில், பிரகாஷ், விக்கி, தீபன், ஷியாம், மதன், விக்னேஷ் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். புரட்சி பாரதம் கட்சி சார்பில் சிபிகுமார், நயப்பாக்கம் மோகன், டி.கே.சீனிவாசன், கோபிச்சந்திரன், த.இளவரசன், ஜி.லோகு, தங்கசாமி, நகர செயலாளர் எழில்வண்ணன், உள்பட 100க்கும் மேற்பட்டோர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் அண்ணல் அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு திருவள்ளூரில் அமைதி பேரணியாகச் சென்று திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்தனர். மாவட்டத் தலைவர் பகுஜன் எம்.பிரேம் தலைமையில், மாவட்ட பொது செயலாளர் புங்கத்தூர் டி.தேவா ஒருங்கிணைப்பில் மாநில தலைவர் கே.ஆம்ஸ்ட்ராங் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் வழக்கறிஞர் சி.சத்தியமூர்த்தி, அம்பேத் ஆனந்த், ஜெய்பீம் செல்வம், வீராவிஜி, கவி, சேலை சுரேஷ், டில்லி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அம்பேத்கர் மக்கள் இயக்கம் சார்பில் சார்பில் மாநில செயல் தலைவர் மாரிமுத்து தலைமையில் வழக்கறிஞர்கள் கணேசன், டி.கே.ராஜா ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் தேவஆசிர்வாதம், பாஸ்கரன், ஏழுமலை, தேவதாஸ், ரங்கன், இளங்கோ, ஜான்பால், மாலன், இயேசு, ஏகலைவன், மணியரசு உள்பட பலர் கலந்து கொண்டனர். புழல்: கதிர்வேடு வட பெரும்பாக்கம் செங்குன்றம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள அம்பேத்கர் திருவுருவ சிலைகளுக்கு அரசியல் கட்சி பிரமுகர்கள், சமுதாய தலைவர்கள் மாலைகள் அணிவிப்பு வந்தனர். இந்நிலையில், செங்குன்றம் அண்ணா பேருந்து நிலையம் அருகில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் கலந்து கொண்டு மாலை அணிவித்து வணங்கினார். இந்நிகழ்ச்சியில் மாநில, மாவட்ட, ஒன்றிய பகுதி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

ஆவடி: சட்ட மாமேதை டாக்டர் அம்பேத்கரின் 67ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, அவரது திருவுருவ சிலைக்கு அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் மற்றும் ஆவடி எம்எல்ஏ சா.மு.நாசர் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். டாக்டர் அம்பேத்கரின் 67ம் ஆண்டு நினைவு நாளையொட்டி சென்னை புறநகர் பகுதியான ஆவடி அடுத்த திருமுல்லைவாயல் சிவசங்கர்புரத்தில் அமைந்துள்ள அவரது திருஉருவச் சிலைக்கு வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், ஆவடி சட்டமன்ற உறுப்பினர் சா.மு.நாசர் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.இந்நிகழ்க்சியின்போது, ஆவடி மாநகராட்சி மேயர் ஜி.உதயகுமார், ஆவடி மாநகராட்சி பொறுப்பாளர் சன்பிரகாஷ், ஆவடி கிழக்குப்பகுதி செயலாளர் பேபி சேகர், நாராயண பிரசாத், வழக்கறிஞர் பிரிவு வினோத், ஆகியோர் உடன் இருந்தனர்.

The post அம்பேத்கரின் நினைவு தினம்: எம்எல்ஏக்கள் மாலை அணிவித்து மரியாதை appeared first on Dinakaran.

Tags : Ambedkar Memorial Day ,Thiruvallur ,Dr. ,Ambedkar ,Memorial Day ,Dinakaran ,
× RELATED நடமாடும் மண், நீர் பரிசோதனை நிலையம்: வேளாண்மை இணை இயக்குனர் தகவல்