தஞ்சாவூர் டிச.2: தூத்துக்குடியில் இருந்து தஞ்சாவூருக்கு 700 டன் உரமூட்டைகள் சரக்கு ரயிலில் வந்திறங்கியது. தமிழகத்தின் நெற்களஞ்சியமாக தஞ்சாவூர் மாவட்டம் விளங்கி வருகிறது. இங்கு குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி நடைபெறும். இது தவிர வாழை, கரும்பு, வெற்றிலை, மக்காச்சோளம், எள், உளுந்து, மரவள்ளிக்கிழங்கு உள்ளிட்டவையும் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. தற்போது தஞ்சாவூர் மாவட்டத்தில் முன்பட்ட குறுவை சாகுபடி நடைபெற்று வருகிறது.
இந்த சாகுபடிக்கு தேவையான விதைகள், உரங்கள் மற்றும் இடுபொருட்கள் வரவழைக்கப்பட்டு இருப்பு வைக்கப்பட்டு தனியார் மற்றும் கூட்டுறவு சங்கங்கள் மூலம் விற்பனை செய்யப்படும். இந்த நிலையில் நேற்று தூத்துக்குடியில் இருந்து சரக்கு ரயிலில் 700 டன் பொட்டாஷ், காம்ப்ளக்ஸ் உரங்கள் தஞ்சாவூருக்கு வந்தறங்கியது. பின்னர் உர மூட்டைகள் லாரிகள் ஏற்றப்பட்டு தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் உள்ள தனியார் உர விற்பனை நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
The post தூத்துக்குடியில் இருந்து தஞ்சாவூருக்கு 700 டன் உரம் வந்தது appeared first on Dinakaran.