×

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதி வழங்க மார்க்சிஸ்ட் எதிர்ப்பு

 

சிவகங்கை, டிச.1: சிவகங்கையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு கூட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் கருப்புசாமி தலைமை வகித்தார். மாநிலக்குழு உறுப்பினர்கள் தர், பொன்னுத்தாய், மற்றும் மாவட்ட செயற்குழு, மாவட்டக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். சிவகங்கை மாவட்டத்தில் தேவகோட்டை உட்பட 125க்கும் மேற்பட்ட கிராமங்களிலும், தேவகோட்டை தாலுகா பகுதியிலும் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்க ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு கிணறும் ரூ.33.75 கோடி செலவில் 3000அடி ஆழத்திற்கு அமைக்கப்படவுள்ளது.

ஹைட்ரோ கார்பன் இயற்கை வளத்தை சூறையாடினால் சிவகங்கை மாவட்டம் பாலைவனமாக மாறும் வாய்ப்புள்ளது. ஒன்றிய பிஜேபி அரசு கார்ப்பரேட் முதலாளிகள் நலனுக்காக பொதுத்துறை நிறுவனங்களையும், இயற்கை வளங்களையும் அழித்து வருவதன் ஒரு பகுதி தான் ஹைட்ரோ கார்பன் திட்டம். தமிழகத்தின் நலனுக்கும், சிவகங்கை மாவட்ட நலனுக்கும் எதிரான ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு தமிழக அரசு அனுமதி அளிக்கக் கூடாது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

The post ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதி வழங்க மார்க்சிஸ்ட் எதிர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Marxist ,Sivagangai ,Marxist Communist Party ,District Secretary ,Karupusamy ,Dinakaran ,
× RELATED தமிழ்நாடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்...