திருவாரூர், நவ. 24: திருவாரூர் மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ள என்று மாவட்ட கலெக்டர் சாரு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை தர்கா கந்தூரி விழாவினையொட்டி இன்று (24ம் தேதி) மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து ஏற்கனவே உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக அரசு அலுவலகங்கள், பள்ளி மற்றும்கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் சனிக்கிழமைகளில் பள்ளிகள் இயங்குவதற்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மழை காரணமாக விடுமுறை அளிக்கும் காரணத்தை கூறாமல் தேர்வுக்கு உரிய பாடங்களை முழுமையாக முடிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பள்ளிக் கல்வித் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் நாளை சனிக்கிழமை பள்ளிகள் இயங்குவது தொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் புகழேந்தி என்பவர் பள்ளிகள் இயங்கும் என ஏற்கனவே தெரிவிக்கவே இது தொடர்பாக செய்தி தொலைக்காட்சிகளில் வெளியிடப்பட்டது. இந்நிலையில் இந்த தகவல் மாவட்ட கலெக்டருக்கு தெரிய வரவே நாளைய தினம் தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தமுகம் நடைபெறுவதால் இந்த முகாம்கள் அனைத்தும் வாக்கு சாவடி மையங்களான பள்ளிகளில் நடைபெறுவதையொட்டி நாளைய தினம் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் அதி்ல் தெரிவித்துள்ளார்.
The post திருவாரூர் மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை appeared first on Dinakaran.