×

பேரையூர் அருகே சிறுத்தை நடமாட்டத்தால் பொதுமக்கள் பீதி

 

பேரையூர், நவ. 24: பேரையூர் அருகே சிறுத்தை நடமாட்டத்தால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகாவிற்கு உட்பட்ட எஸ்.மேலப்பட்டி கிராமம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் அமைந்துள்ளது. இந்த கிராமத்திற்குள் நேற்று முன் தினம் இரவு சிறுத்தை ஒன்று உலா வந்ததாக கூறப்படுகிறது. அந்த சிறுத்தை குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து 5 ஆடுகளை கொன்றுள்ளது.

மேலும் சிறுத்தை அந்த பகுதியில் உலாவுவது அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவாகி உள்ளது. மேலும் அந்த சிசிடிவி காட்சியில் இருப்பது சிறுத்தை தானா என்பதை கண்டறிய சாப்டூர் வனத்துறையினர் 4 இடங்களில் கேமராக்களை பொருத்தி சிறுத்தையின் நடமாட்டத்தினை கண்காணித்து வருகின்றனர். இதனால் இப்பகுதியிலுள்ள பொதுமக்கள், சிறுத்தை நடமாட்டத்தால், காடு, தோட்டங்களுக்கு செல்ல முடியாமல் பொதுமக்கள் அச்சம் அடைந்து வருகின்றனர்.

The post பேரையூர் அருகே சிறுத்தை நடமாட்டத்தால் பொதுமக்கள் பீதி appeared first on Dinakaran.

Tags : Beraiyur ,Madurai district ,Dinakaran ,
× RELATED மதுரையில் அடுத்தடுத்து 3 பேருந்துகள் மோதி விபத்து..!!