×

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 10,197 ஆக சரிவு..301 பேர் தொற்றுக்கு பலி!!

புதுடெல்லி: நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4.64 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 3.44 கோடியை தாண்டியது. இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:* புதிதாக 10,197 பேர் பாதித்துள்ளனர்.* இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,44,66,598 ஆக உயர்ந்தது.* புதிதாக 301 பேர் இறந்துள்ளனர்.* இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,64,153 ஆக உயர்ந்தது.* தொற்றில் இருந்து ஒரே நாளில் 12,134 பேர் குணமடைந்துள்ளனர்.* இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,38,73,890 ஆக உயர்ந்துள்ளது.* இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 1,28,555 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.* குணமடைந்தோர் விகிதம் 98.28% ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.35% ஆக குறைந்துள்ளது.* சிகிச்சை பெறுவோர் விகிதம் 0.37% ஆக குறைந்துள்ளது.*இந்தியாவில் 1,13,68,79,685 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 67,82,042பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. …

The post இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 10,197 ஆக சரிவு..301 பேர் தொற்றுக்கு பலி!! appeared first on Dinakaran.

Tags : New Delhi ,Corona ,LIKEWISE ,
× RELATED ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாற்று டிஜிட்டல் கேஒய்சி