×

மது வாங்கிய தகராறில் நடந்த வாலிபர் கொலையில் 4 பேர் கைது

வாடிப்பட்டி, நவ.19:சமயநல்லூர் அருகே, பரவை பேரூராட்சியில் உள்ள மீனாட்சி நகர் 5வது தெருவைச் சேர்ந்த முத்துப்பழனி மகன் ராம்குமார் (25). இவர் நேற்று முன்தினம் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். இது குறித்து சமயநல்லூர் போலீசார் 2 பேரை பிடித்து விசாரித்து வந்தனர். இச்சம்பவம் தொடர்பாக எஸ்பி சிவபிரசாத் உத்தரவின் பேரில் டிஎஸ்பி பாலசுந்தரம் ஆலோசனையின் பேரில், இன்ஸ்பெக்டர் ராதா மகேஷ் தலைமையிலான தனிப்படையினர் கொலையாளிகளை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் இரவு பரவை கொண்டமாரி பகுதியில் ரோந்து சென்றனர்.

அப்போது, அங்கு சந்தேகம் அளிக்கும் வகையில் நின்றிருந்த 4 பேரை பிடித்து விசாரித்தனர். முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தால் அவர்களது உடமைகளை சோதனை செய்தனர். பையில் கத்தி, மதுபாட்டில் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து இவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் மதுரை, செல்லூரை சேர்ந்த லோடுமேன்கள் தென்னரசு (28), குமார் என்ற இளவரசன் (32), பிரபாகரன் (20), அஜித்குமார் (20) என்பதும், மதுபாட்டில்கள் வாங்கிய தகராறில் ராம்குமாரை, இவர்கள் கொலை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

The post மது வாங்கிய தகராறில் நடந்த வாலிபர் கொலையில் 4 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Vadipatti ,Ramkumar ,Muthuppalani ,5th Street, Meenakshi Nagar, Paravai District ,Samayanallur ,
× RELATED நிலமோசடி வழக்கில் சார்பதிவாளர் கைது