×

நிலமோசடி வழக்கில் சார்பதிவாளர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே எம்.வாடிப்பட்டியை சேர்ந்தவர் தங்கராஜன்(50). இவர், கடந்த 2010ம் ஆண்டு அதே பகுதியில் 62 சென்ட் நிலத்தை அமலோற்பவம் என்பவரிடம் இருந்து விலைக்கு வாங்கினார். இந்த நிலமானது கடந்தாண்டு 2 பேருக்கு விற்கப்பட்டதாக புகார் எழுந்தது. இதுகுறித்து தங்கராஜன் அளித்த புகாரில் போலீசார் விசாரித்தனர். அதில், ஆவணங்களை முறையாக ஆய்வு செய்யாமல், தங்கராஜனின் பெயரில் இருக்கும் நிலம் மற்றொரு நபரின் பெயரில் பத்திரப்பதிவு செய்யப்பட்டது தெரிய வந்தது.

இதுதொடர்பாக திருவள்ளூர் மாவட்டம், திருவொற்றியூர் பெலிக்ஸ் மார்ட்டின், வடமதுரை நெல்சன், பட்டுக்கோட்டை அருள் ஜெசிந்தாமேரி, காஞ்சிபுரம் மாவட்டம் கெருகம்பாக்கம் சகாயச்செல்வி, கும்பகோணம் கெவின் மைக்கேல், அந்துவான் கிறிஸ்டி, மதுரை உத்தங்குடி கிறிஸ்டோபர் சாமுவேல் மற்றும் சாட்சிகளாக கையெழுத்திட்ட வேடசந்தூரைச் சேர்ந்த முருகானந்தம், கடலூர் தருண்குமார், நிலக்கோட்டை பெரியசாமி, திண்டுக்கல் மரியநாதபுரம் ராஜ்பாரத், நிலக்கோட்டையைச் சேர்ந்த பத்திர எழுத்தர் கந்தசாமி, அய்யம்பாளையம் சார்பதிவாளர் பாலமுருகன் ஆகிய 13 பேர் மீது நில அபகரிப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில், பாலமுருகனை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

The post நிலமோசடி வழக்கில் சார்பதிவாளர் கைது appeared first on Dinakaran.

Tags : Dindigul ,Thangarajan ,M. Vadipatti ,Nilakottai, Dindigul district ,Amalolpavam ,Dinakaran ,
× RELATED அப்பப்பா…அனல் காத்து வீசுது...