- சமாதான பேரணி
- முத்துப்பேட்டை
- சங்கராய்யா
- முத்துபேட்டை
- திருவாரூர்
- முத்துப்பேட்டை
- மார்க்சிச கம்யூனிஸ்ட் சங்கர
- சங்கரையா
முத்துப்பேட்டை, நவ.17: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் அனைத்து கட்சி சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் சங்கரய்யா மறைவையொட்டி அமைதி பேரணி மற்றும் இரங்கல் கூட்டம் நடைபெற்றது. இதற்கு மார்க்சிஸ்ட் நகர செயலாளர் செல்லத்துரை தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி முன்னிலை வகித்தார்.
விசிக மாவட்ட செயலாளர் வெற்றி, மதிமுக மாநில நிர்வாகி நடராஜன், தமுமுக வழக்கறிஞர் தீன்முகமது, அரசு ஊழியர் சங்க வட்டார தலைவர் தமிழ்ச்சுடர், திமுக நிர்வாகி நவாஸ்கான், மக்கள் நீதி மையம் நிர்வாகி ராஜ்மோகன், காங்கிரஸ் வட்டார தலைவர் கோவி ரெங்கசாமி, இந்திய கம்யூனிஸ்ட் நகர செயலாளர் மார்க்ஸ், விவசாய சங்க மாவட்ட துணைச்செயலாளர் முருகையன், தொழிற்சங்க மாவட்ட செயலாளர் சந்திர சேகர ஆசாத், மார்க்சிஸ்ட் மாவட்ட குழு உறுப்பினர் ஜோதி பாசு ஆகியோர் பேசினார். முன்னதாக மன்னை சாலையிலிருந்து அமைதி பேரணி நடைபெற்றது.
The post சங்கரய்யா மறைவையொட்டி முத்துப்பேட்டையில் அமைதி பேரணி appeared first on Dinakaran.