×

வாலிபரை தாக்கியவர் கைது

 

சேலம், நவ.7: சேலம் செவ்வாய்பேட்டை ஹவுசிங் போர்டு காந்திநகரை சேர்ந்தவர் கலைச்செல்வன்(28). தனியார் பார்சல் சர்வீஸ் கம்பெனியில் பணியாற்றி வருகிறார். இவர் பணியாற்றி வரும் இடத்திற்கு காந்திநகரை சேர்ந்த பிரவீன் என்பவர் வந்தார். அப்போது திடீரென கலைச்செல்வனுக்கும் பிரவீனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் பிரவீன் தான் வைத்திருந்த பீர்பாட்டிலால் கலைச்செல்வனின் கழுத்தில் தாக்கினார். இதில் படுகாயமடைந்த அவர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுபற்றிய புகாரின் பேரில் செவ்வாய்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து பிரவீனை கைது செய்தனர்.

The post வாலிபரை தாக்கியவர் கைது appeared first on Dinakaran.

Tags : Salem ,Kalaichelvan ,Salem Sewwaipet Housing Board ,Gandhinagar ,
× RELATED மயங்கி விழுந்த கடை உரிமையாளரிடம் நகை பறிப்பு