×

சாலை விபத்தில் தொழிலாளி சாவு

 

தூத்துக்குடி, நவ.6: தூத்துக்குடி மாவட்டம், மேலத்தட்டப்பாறை பகுதியைச் சேர்ந்த மாரியப்பனின் மகன் முனியசாமி (32). பசுவந்தணை பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் தொழிலாளியாக வேலை பார்த்துவந்த இவர் நேற்று (5ம் தேதி) காலை தூத்துக்குடி- மதுரை சாலையில் பைக்கில் சென்றுகொண்டிருந்தார். எப்போதும்வென்றான் அடுத்த செய்தலை அருகே சென்றபோது எதிர்பாராதவிதமாக அங்கு சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரியின்மீது இவரது பைக் மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த முனியசாமியை மீட்ட அக்கம்பக்கத்தினர், ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவரை மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ஆனால், செல்லும் வழியிலேயே அவர் இறந்தார். விபத்து குறித்து எப்போதும் வென்றான் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

The post சாலை விபத்தில் தொழிலாளி சாவு appeared first on Dinakaran.

Tags : Tuticorin ,Muniyaswamy ,Mariyappan ,Melatattaparai, ,Tuticorin district ,Pasuvanthani ,Dinakaran ,
× RELATED திருச்செந்தூர் அருகே கட்டிட தொழிலாளி அடித்துக் கொலை