×

டூவீலர் விபத்தில் விவசாயி பலி

 

தர்மபுரி, நவ.4: கம்பைநல்லூர் மூலக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் துரைசாமி(61). விவசாயியான இவர் நேற்று முன்தினம், அதே பகுதியில் உள்ள மளிகை கடைக்கு பொருட்கள் வாங்க டூவீலரில் சென்றார். பொருட்களை வாங்கிக்கொண்டு வீடு திரும்பிய போது, எதிரே வந்த டூவீலர், எதிர்பாராத விதமாக அவர் மீது மோதியது. இதில், துரைசாமி தூக்கி வீசப்பட்டு காயமடைந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம், தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்து கம்பைநல்லூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

The post டூவீலர் விபத்தில் விவசாயி பலி appeared first on Dinakaran.

Tags : Dharmapuri ,Duraisamy ,Moolakkottai ,Kambainallur ,Dinakaran ,
× RELATED வாகனம் மோதி பெயிண்டர் பலி