×

விண்ணப்பிக்க கலெக்டர் அழைப்பு மேல்முறையீடு செய்தவர்களின் மனு கள ஆய்வு விடுபட்டவர்களுக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்க நடவடிக்கை மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் தகவல்

கொள்ளிடம்: மேல்முறையீடு செய்தவர்களின் மனு கள ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. விடுபட்டவர்களுக்கு மகளிர் உரிமைதொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார். உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு கொள்ளிடம் அருகே கூத்தியம்பேட்டை ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு கூத்தியம்பேட்டை ஊராட்சி மன்ற தலைவர் பவானி இளங்கோவன் தலைமை வகித்தார், மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் உமாமகேஸ்வரி சங்கர், கொள்ளிடம் ஒன்றியக்குழு தலைவர் ஜெயபிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் சிறப்பு பார்வையாளர்களாக மாவட்ட கலெக்டர் மகாபாரதி, சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

The post விண்ணப்பிக்க கலெக்டர் அழைப்பு மேல்முறையீடு செய்தவர்களின் மனு கள ஆய்வு விடுபட்டவர்களுக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்க நடவடிக்கை மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Mayiladuthurai ,Kollidham ,Dinakaran ,
× RELATED மயிலாடுதுறையில் திடீர் பரபரப்பு உயர்...