×

கோயம்புத்தூர் செல்லும் ஜன சதாப்திக்கு இணைப்பாக காரைக்காலிலிருந்து திருச்சி செல்லும் ரயிலை இயக்க வேண்டும்

நாகப்பட்டினம்: மயிலாடுதுறையிலிருந்து கோயம்புத்தூர் செல்லும் ஜன சதாப்தி ரயிலுக்கு இணைப்பு ரயிலாக காரைக்காலில் இருந்து திருச்சி செல்லும் ரயிலை இரண்டு மார்க்கத்தில் இயக்க வேண்டும் என நாகூர் நாகப்பட்டினம் ரயில் உபயோகிப்பாளர் நலசங்கம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தென்னக ரயில்வே திருச்சி கோட்ட மேலாளருக்கு, உபயோகிப்பாளர் நல சங்க தலைவர் மோகன், செயலாளர் சித்திக் ஆகியோர் அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் தெரிவித்திருப்பதாவது: மயிலாடுதுறையில் இருந்து கோயம்புத்தூர் செல்லும் ஜன சதாப்தி ரயிலுக்கு இணைப்பாக காரைக்காலில் இருந்து திருச்சி செல்லும் ரயிலை தஞ்சாவூர் வரை இரண்டு மார்க்கத்திலும் இயங்கியது. இதனால் கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர் ஆகிய பகுதிகளில் இருந்து நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, நாகூர், திருநள்ளார் வந்து செல்லும் பக்தர்கள், ரயில் பயணிகள் பயன் அடைந்து வந்தனர்.

The post கோயம்புத்தூர் செல்லும் ஜன சதாப்திக்கு இணைப்பாக காரைக்காலிலிருந்து திருச்சி செல்லும் ரயிலை இயக்க வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Karaikal ,Trichy ,Coimbatore ,Jana Shatabdi ,Nagapattinam ,Jana Sadapti ,Mayiladuthurai ,Jana ,Sadapti ,Dinakaran ,
× RELATED ரூ.3.90 கோடி செலவில் காரைக்கால் மீன்பிடி...