×

தீபாவளி பண்டிகை காலம் என்பதால் கழிவு நீக்கம் செய்யப்பட்ட அரசு வாகனங்கள் ஏலம்

கரூர்: கரூர் மாவட்ட உதவி ஆணையர் (கலால்) கருணாகரன் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: கரூர் மாவட்டம், உதவி ஆணையர் (கலால்) அலுவலக பயன்பாட்டிற்கான வாகனம் முதிர்ந்த நிலையில் கழிவு நீக்கம் செய்யப்பட்டு பொது ஏலம் வரும் நவம்பர் 14ம்தேதி காலை 11 மணிக்கு கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெறவுள்ளது. ஏலம் எடுக்க விரும்பம் உள்ளவர்கள் வரும் நவம்பர் 14ம்தேதி காலை 10 மணி முதல் 11 மணி வரை கமாண்டர் ஜீப்பிற்கு (மகேந்திரரா அன்ட் மகேந்திரா) ரூ. 2ஆயிரம் முன்வைப்பு தொகையை செலுத்தி ஏலம் எடுக்க தங்கள் பெயரில் பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும், ஏலம் எடுத்தவர்கள் ஏலத் தொகையுடன் நான்கு சக்கர வாகனத்னதிற்கு ஏலத்தொகை மற்றும 18 சதவீத ஜிஎஸ்டி, 9 சதவீத சிஜிஎஸ்டி வரியுடன் சேர்த்து நவம்பர் 14ம்தேதி, உடனே செலுத்த வேண்டும். ஏலம் எடுக்க விரும்பம் உள்ளவர்கள் வரும் நவம்பர் 6ம்தேதி காலை 10 மணி முதல் ஏலம் நடைபெறும் நேரம் வரை வாகனத்தை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் பார்வையிடலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post தீபாவளி பண்டிகை காலம் என்பதால் கழிவு நீக்கம் செய்யப்பட்ட அரசு வாகனங்கள் ஏலம் appeared first on Dinakaran.

Tags : Diwali ,Karur ,Karur District ,Assistant Commissioner ,Karunakaran ,Commissioner ,
× RELATED வெயிலால் பாதிப்பு ஏற்பட்டால் அவசர...