×

கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை மூலம் நலிந்தோர் 8 பேருக்கு தலா ரூ.25 ஆயிரம் உதவித்தொகை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

சென்னை: கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை மூலம் நலிந்தோர் 8 பேருக்கு தலா ரூ.25ஆயிரம் உதவி தொகையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இதுகுறித்து, திமுக தலைமை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கலைஞர் கருணாநிதி அறக்கட்டளைக்காக, கலைஞர் தனது சொந்த பொறுப்பில் அளித்த ரூ.5 கோடியை வங்கியில் வைப்பு நிதியாக போடப்பட்டு, அதில் கிடைக்கப்பெறும் வட்டித் தொகையினைக் கொண்டு, மாதந்தோறும் ஏழை எளிய நலிந்தோர்க்கு உதவித் தொகையாக வழங்கப்பட்டு வருகிறது.

வைப்பு நிதியாக போடப்பட்ட ரூ.5 கோடியில், 30வது புத்தகக் கண்காட்சியினை 2007 ஜனவரி 10ம்தேதி அன்று திறந்து வைத்து கலைஞர் பேசுகையில், ‘கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை சார்பில், தென்னிந்திய புத்தக விற்பனையாளர்-பதிப்பாளர் சங்கத்துக்கு ரூ.ஒரு கோடி வழங்கப்படும்’ என அறிவித்து அச்சங்கத்துக்கு வழங்கியது போக மீதமுள்ள ரூ.4கோடியில் இருந்து வரும் வட்டித் தொகையில் 2007 பிப்ரவரி முதல் தொடர்ந்து உதவித் தொகை வழங்கப்படுகிறது. 2005 நவம்பர் முதல் இதுவரை வழங்கிய நிதி ரூ.5 கோடியே 85 லட்சத்து 90 ஆயிரம்.

இந்த மாதம் நலிந்தோர் மற்றும் மருத்துவ உதவி நிதியாக மொத்தம் 8 பேருக்கு தலா ரூ.25 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.2,00,000 நேற்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். நிதி பெறுவோர் வெளி மாவட்டங்களிலிருந்து வந்து போகிற செலவினத்தை தவிர்ப்பதற்காக தபால் மூலம் வரைவுக் காசோலையாக அனுப்பப்படுகிறது. கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை சார்பில் நலிந்தோர் மற்றும் மருத்துவம் உதவி நிதியாக இதுவரை ரூ. 5 கோடியே 85 லட்சத்து 90 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை மூலம் நலிந்தோர் 8 பேருக்கு தலா ரூ.25 ஆயிரம் உதவித்தொகை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : Artist Karunanidhi Trust ,Chief Minister ,M.K.Stalin. ,Chennai ,M.K.Stalin ,Artist Karunanidhi Foundation.… ,Artist Karunanidhi Foundation ,Dinakaran ,
× RELATED கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை சார்பில் 8...