×

அனுமதியின்றி வைக்கப்பட்ட விநாயகர் சிலை அகற்றம்: தாசில்தார் நடவடிக்கை

ஆலந்தூர்: பரங்கிமலை பட்ரோடு மங்காளி அம்மன் கோயில் தெரு சந்து பாதையில், அப்பகுதியை சேர்ந்த சிலர் அனுமதியின்றி, போக்குவரத்திற்கு இடையூறாக, பிள்ளையார் சிலை வைத்துள்ளனர். இதுபற்றி அப்பகுதி மக்கள் பரங்கிமலை போலீசில் புகார் செய்தனர். இதுதொடர்பாக, ஆய்வாளர் செல்லப்பா, பல்லாவரம் தாசில்தாருக்கு கடிதம் எழுதினார். அதன்பேரில், தாசில்தார் ஆறுமுகம், பாங்கிமலை போலீஸ் உதவி கமிஷன் ஜீவானந்தம், ஆய்வாளர் செல்லப்பா கிராம நிர்வாக அலுவலர் சிவக்குமார் ஆகியோர், நேற்று சம்பவ இடத்திற்கு வந்து, அனுமதியின்றி வைக்கப்பட்ட பிள்ளையார் சிலையை அகற்றினர். இதனால் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.

The post அனுமதியின்றி வைக்கப்பட்ட விநாயகர் சிலை அகற்றம்: தாசில்தார் நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Ganesha ,Alandur ,Parangimalai Patrodu ,Mangali Amman Koil Street Lane ,
× RELATED எடுத்த காரியங்கள் யாவும் வெற்றி பெற உதவும் விநாயகர் வழிபாடு..!!