×

பணத்தகராறு எதிரொலி பெயின்டர் அடித்து கொலை: வாலிபர் கைது

 

பேரையூர், அக். 16: பணத்தகராறில் பெயின்டரை அடித்து கொன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். மதுரை மாவட்டம், பேரையூர் தாலுகா டி.கல்லுப்பட்டி அருகே தேவன்குறிச்சி ஆவுடையாபுரத்தை சேர்ந்தவர் சக்திமோகன் (47). இதே ஊரை சேர்ந்தவர் கார்த்திக் கணேஷ் (27). இருவரும் பெயின்டர்கள். இவர்களிடையே பணம் கொடுக்கல் வாங்கலில் தகராறு இருந்து வந்துள்ளது. மதுரை அருகே திருநகர் பகுதிக்கு நேற்று முன்தினம் காலை இருவரும் பெயின்ட்டிங் வேலைக்கு சென்றுள்ளனர். வேலை முடிந்தபின், இரவு 11 மணியளவில் இருவரும் மதுபோதையில் வீடு திரும்பினர்.

வீட்டின் அருகே பணம் தொடர்பாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த கார்த்திக் கணேஷ், சக்திமோகனை சரமாரியாக தாக்கிவிட்டு தப்பியோடிவிட்டார். இதில் பலத்த காயமடைந்த சக்திமோகன், மயங்கி விழுந்து உயிரிழந்தார். நேற்று அதிகாலை அந்த வழியாக சென்றவர்கள், அவரது உடலை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். தகவலறிந்து வந்த டி.கல்லுப்பட்டி போலீசார், சக்திமோகனின் உடலை மீட்டு திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிந்த போலீசார், கார்த்திக் கணேசை கைது செய்தனர்.

The post பணத்தகராறு எதிரொலி பெயின்டர் அடித்து கொலை: வாலிபர் கைது appeared first on Dinakaran.

Tags : Beraiyur ,Madurai District ,Dinakaran ,
× RELATED மதுரையில் அடுத்தடுத்து 3 பேருந்துகள் மோதி விபத்து..!!