×

அரூரில் வெறிச்சோடிய இறைச்சி கடைகள்

அரூ: புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உரிய மாதம் என்பதால், மக்கள் சனிக்கிழமைகளில் விரதம் இருந்து பெருமாளை வழிப்பட்டு வருவது வழக்கம். நேற்று முன்தினம் கடைசி சனிக்கிழமை என்பதால், அனைத்து பெருமாள் கோயில்களில் பக்தர்கள் திரளாக பங்கேற்று தரிசனம் செய்தனர். இந்நிலையில், நேற்று இறைச்சி கடைகளில் கூட்டம் அதிகரிக்கும் என எண்ணினர். ஆனால், நேற்று வழக்த்தை விட இறைச்சி கடைகளில் கூட்டம் குறைந்து காணப்பட்டது. மொத்தமாக அரூரில் இறைச்சி கடைகள் வெறிச்சோடி காணப்பட்டது. கோழி, ஆடு, மீன் என கடைகளில் மக்கள் கூட்டம் இன்றி காணப்பட்டது. வரும் புதன் கிழமை ஐப்பசி மாதம் தொடங்க உள்ளதால், இறைச்சி விற்பனை அதிகரிக்கும் என கடைக்காரர்கள் தெரிவித்தனர்.

The post அரூரில் வெறிச்சோடிய இறைச்சி கடைகள் appeared first on Dinakaran.

Tags : Aroor ,Aru ,Puratasi ,Perumal ,
× RELATED 517 பள்ளிகளுக்கு இலவச நோட்டு புத்தகம் விநியோகம்