×

தரகம்பட்டி அருகே கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம்

தோகைமலை: கடவூர் ஒன்றியத்தில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பாக, சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் தொடங்கி உள்ளது. இதன் ஒரு பகுதியாக கால்நடை துறை மண்டல இணை இயக்குநர் சாந்தி மற்றும் துணை இயக்குநர் பாஸ்கர் மேற்பார்வையில் கீரனூர் ஊராட்சி கீரனூர் கிராமத்தில் நேற்று கால்நடைகளுக்கான சிறப்பு முகாம் மற்றும் கன்றுகள் பேரணி நடந்தது. கீரனூர் ஊராட்சி மன்ற தலைவர் மகாலட்சுமி தலைமை வகித்தார். கால்நடை உதவி மருத்துவர்கள் ரேணுகாதேவி, பிரேம்குமார், செந்தில், மணிகண்டன் கலந்து கொண்டு கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தனர். கால்நடைகளுக்கு குடற்புழு நீக்குதல், ஆண்மை நீக்கம், நோய்களுக்கு எதிரான தடுப்பூசி போடுதல், செயற்கைமுறை கருவூட்டல், சினை பரிசோதனை, சிறு அறுவை சிகிச்சைகள், தாது உப்பு கலவை வழங்குதல் உள்பட கால்நடைகளுக்கு பல்வேறு சிகிச்சைகள் அளிக்கப்பட்டது.

The post தரகம்பட்டி அருகே கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம் appeared first on Dinakaran.

Tags : Dharagambatti ,Tokaimalai ,Kadavur ,Dinakaran ,
× RELATED கடவூர், தோகைமலை பகுதியில் கம்பு சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்