×

நான் மீண்டும் முதல்வராக வேண்டுமா? வேண்டாமா?.. மக்களிடம் கருத்து கேட்கிறார் ம.பி. முதல்வர் சிவ்ராஜ் சிங்


போபால்: நான் மீண்டும் மத்தியபிரதேச முதல்வராக வேண்டுமா? வேண்டாமா? என மத்தியபிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் மக்களிடமே கேட்டுள்ளார். மத்தியபிரதேசத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ள நிலையில், 230 தொகுதிகளில் 79 தொகுதிகளுக்கான 3 கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜ வௌியிட்டது. இதில் தற்போதைய முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகானின் பெயர் இடம்பெறவில்லை. மேலும் முதல்வர் வேட்பாளரை அறிவிக்காமலேயே மோடியை முன்னிறுத்தி பேரவை தேர்தலை சந்திக்க பாஜ திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், திண்டோரி பகுதியில் நேற்று நடந்த பாஜ பொதுகூட்டத்தில் உரையாற்றிய சிவ்ராஜ் சிங் சவுகான், “என் அரசு நல்ல அரசா.. மோசமான அரசா.. என்று உங்களிடம் கேட்க விரும்புகிறேன். இந்த அரசு தொடர வேண்டுமா.. நான் மீண்டும் உங்கள் முதல்வராக வேண்டுமா.. வேண்டாமா..?நாட்டின் பிரதமராக மோடி நீடிக்க வேண்டுமா.. ?” என்று அங்கிருந்த மக்களை பார்த்து கேள்வி எழுப்பி உள்ளார்.

முதல்வர் விரக்தியில் உள்ளார்
சிவ்ராஜ் சிங் சவுகானின் கேள்வி குறித்து மத்தியபிரதேச காங்கிரஸ் தலைவர் கமல்நாத் எக்ஸ் பதிவில், “ம.பி பாஜ விரக்தியில் உள்ளதை சவுகானின் பேச்சு காட்டுகிறது. முதல்வர் வேட்பாளர் பெயர் அறிவிக்கப்படாததால், நான் முதல்வராக வேண்டுமா.. வேண்டாமா.. என்று கேட்ட சிவ்ராஜ் சிங் சவுகான், இப்போது மோடி பிரதமராக நீடிக்க வேண்டுமா.. வேண்டாமா? என்று கேட்கிறார்” என்று பதிவிட்டுள்ளார்.

The post நான் மீண்டும் முதல்வராக வேண்டுமா? வேண்டாமா?.. மக்களிடம் கருத்து கேட்கிறார் ம.பி. முதல்வர் சிவ்ராஜ் சிங் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Shivraj Singh ,Bhopal ,Madhya Pradesh ,CM ,Shivraj Singh Chouhan ,
× RELATED மபியில் இரவு 10 மணி தாண்டியதால் சவுகான்...