×

மூதாட்டியிடம் நகை பறிப்பு

சிவகங்கை: சிவகங்கையில் மூதாட்டி கழுத்தில் அணிந்திருந்த 17பவுன் நகையை மர்ம நபர்கள் பறித்து சென்றனர். சிவகங்கை வ.உ.சி தெருவில் வசித்து வருபவர் கிருஷ்ணன், ஆண்டாள் தம்பதியர். இவர்களது மகன் அதே பகுதியில் நகை கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று காலை ஆண்டாள் அவரது வீட்டு வாசலில் கோலம் போட்டு கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக டூவீலரில் வந்த மர்ம நபர்கள் மூதாட்டி கழுத்தில் அணிந்திருந்த 17பவுன் தங்க செயினை பறித்து சென்றனர். ஆண்டாள் கூச்சலிட்ட நிலையில் அதற்குள் மர்ம நபர்கள் தப்பிச் சென்றனர். இது குறித்து சிவகங்கை நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

The post மூதாட்டியிடம் நகை பறிப்பு appeared first on Dinakaran.

Tags : Sivagangai ,Sivagangai VUC Street ,
× RELATED ஓய்வூதியம் பெற இ-சேவை மையம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்கலாம்