×

பொற்கோயிலில் ராகுல் வழிபாடு

அமிர்தசரஸ்: பஞ்சாபில் உள்ள அமிர்தசரஸ் பொற்கோயிலில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி நேற்று வழிபாடு செய்தார். பஞ்சாபில் 2015ம் ஆண்டு போதைப்பொருள் வழக்கில் காங்கிரஸ் எம்எல்ஏ சுகபால் சிங் கைராவை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக ஆளும் ஆம் ஆத்மி கட்சிக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. ஆம் ஆத்மியுடன் கூட்டணி அமைக்கக்கூடாது என்று பஞ்சாப் காங்கிரஸ் வலியுறுத்தி வருகின்றது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல்காந்தி நேற்று தனிப்பட்ட பயணமாக பஞ்சாப் சென்றார். காலை 11.15மணிக்கு அமிர்தசரஸில் உள்ள விமான நிலையத்தில் ராகுல் வந்திறங்கினார்.

தொடர்ந்து பொற்கோயில் சென்ற அவர் சிறப்பு வழிபாடு நடத்தினார். முன்னதாக பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் அம்ரீந்தர் சிங் ராஜா, தனது டிவிட்டர் பதிவில்,‘‘ராகுல் காந்தி தனிப்பட்ட ஆன்மீக பயணமாக அமிர்சரஸ் வருகிறார். இங்கு அமைந்துள்ள ஹர்மந்திர் சாஹிப் குருத்வாராவில் அவர் வழிபாடு செய்கிறார். கட்சி தொண்டர்கள் யாரும் இங்கு வரவேண்டாம் என்று ராகுல் வேண்டுகோள் விடுத்துள்ளார். நீங்கள் அனைவரும் அவருக்கு ஆன்மிகத்துக்கு ஆதரவு தர வேண்டும். அடுத்த முறை அவரை சந்தியுங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

The post பொற்கோயிலில் ராகுல் வழிபாடு appeared first on Dinakaran.

Tags : Rahul ,Golden Temple ,Amritsar ,Former ,Congress ,president ,Rahul Gandhi ,Amritsar Golden Temple ,Punjab ,Dinakaran ,
× RELATED யாரும் ஓட்டு போட கூடாது; ராகுல்...