
- ஓட்டேரி செல்லப்பிள்ளையார் கோவில்
- சென்னை
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- முதல் அமைச்சர்
- எம். ஸ்டால்
- இந்து மதம்
- சமய
- அறக்கட்டளைகள்
- அமைச்சர்
- சேகர்பாபு
- இந்து சமய அறநெறிகள் துறை
சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படியும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அறிவுறுத்தலின்படியும், இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள திருக்கோயில்களுக்கு சொந்தமான சொத்துக்களை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. அதன்படி இன்று (29.09.2023) சென்னை, ஓட்டேரி, அருள்மிகு செல்லப்பிள்ளையார் திருக்கோயிலுக்கு சொந்தமான ரூ.1.5 கோடி மதிப்பீட்டிலான சொத்து மீட்கப்பட்டு திருக்கோயில் வசம் சுவாதீனம் பெறப்பட்டுள்ளது. சென்னை, ஓட்டேரி, அருள்மிகு செல்லப்பிள்ளையார் திருக்கோயிலுக்கு சொந்தமாக ஓட்டேரி செல்ல பெருமாள் கோயில் தெருவில் அமைந்துள்ள 1,440 சதுரடி பரப்பளவிலான கட்டிடம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தது.
சென்னை மண்டலம் இணை ஆணையர் நீதிமன்ற உத்தரவின்படி சட்டப்பிரிவு 78 மற்றும் 79ன் கீழ் ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இணை ஆணையர் திருமதி ஜ.முல்லை அவர்கள் தலைமையில், உதவி ஆணையர் (கூடுதல் பொறுப்பு) சி.நித்யா முன்னிலையில் காவல்துறை மற்றும் வருவாய்துறை அலுவலர்களின் உதவியோடு ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு திருக்கோயில் வசம் சுவாதீனம் பெறப்பட்டது. மீட்கப்பட்ட சொத்தின் தற்போதைய சந்தை மதிப்பு ரூ.1.5 கோடியாகும். இந்நிகழ்வின்போது திருக்கோயில் செயல் அலுவலர் சண்முகம், சிறப்பு பணி அலுவலர்கள் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் உடனிருந்தனர்.
The post சென்னை ஓட்டேரி செல்லப்பிள்ளையார் கோயிலுக்கு சொந்தமான ரூ.1.5 கோடி மதிப்பீட்டிலான சொத்து ஆக்கிரமிப்பிலிருந்து மீட்பு appeared first on Dinakaran.