×

டூவீலர் விபத்தில் செக்யூரிட்டி பலி

 

போடி, செப். 29: போடி அருகே தம்மிநாயக்கன்பட்டியை சேர்ந்த பரமன் மகன் பிரபு (39). இவர் போடியில் உள்ள தனியார் வங்கியில் செக்ரியூட்டியாக இருந்து வந்தார். இந்நிலையில் கடந்த 21ம் தேதி வங்கியில் வேலை முடிந்து டூவீலரில் சொந்த ஊர் புறப்பட்டார். வழியில் கோணாம்பட்டி அருகே திடீரென நாய் குறுக்கே வந்ததால் திடீரென பிரேக் அடித்தார்.

இதில் நிலைதடுமாறிய அவரது டூவீலரில் இருந்து தவறி கீழே விந்து படுகாயம் அடைந்தார். முதற்கட்டமாக போடி அரசு மருத்துமவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பலியானார். விபத்து குறித்து போடி தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

The post டூவீலர் விபத்தில் செக்யூரிட்டி பலி appeared first on Dinakaran.

Tags : Security ,Bodi ,Paraman Makan Prabhu ,Thammanayakanpatti ,Dinakaran ,
× RELATED போடி-தேவாரம் சாலையில்...