×

கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் கற்களை கொண்டு தாக்குதல்

ராமநாதபுரம்: ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் கற்களை கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர். கச்சத்தீவு அருகே மீன்பிடித்தவர்கள் மீது கற்களை கொண்டு தாக்குதல் நடத்தியதில் மீனவர் ஒருவர் காயமடைந்துள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிப்பதற்காக அனுமதி சீட்டு பெற்று சுமார் 50க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீனவர்கள் மீண்டபிடிக்க கடலுக்கு சென்றுள்ளனர். இந்நிலையில் கச்சத்தீவு அருகே மீனவர்கள் மீன்பிடித்து கொண்டிருந்தபோது அப்பகுதியில் வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி ராமேஸ்வரத்தை சேர்ந்த விசைப்படகின் மீது கற்களை கொண்டு தாக்குதலில் ஈடுபட்டனர்.

இதில் பிராங்க்ளின் என்ற மீனவர் படுகாயமடைந்தார். இதையடுத்து சக மீனவர்கள் அவரை மீட்டு ராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் சிகிச்சை முடிந்து மீனவர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இதையடுத்து படுகாயதமடைந்த மீனவரிடம் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஒருவாரமாக நாகை மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு அவர்கள் தீவிர சிகிச்சையில் உள்ள நிலையில் ராமேஸ்வரம் மீனவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது மீனவர்களிடையே அச்சத்தையும், பதற்ற சூழலையும் ஏற்படுத்தியுள்ளது.

The post கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் கற்களை கொண்டு தாக்குதல் appeared first on Dinakaran.

Tags : Sri Lankan Navy ,Kachathivu ,Ramanathapuram ,Rameswaram ,Kachchathivu ,Dinakaran ,
× RELATED 3 தமிழக மீனவர்கள் கைது: இலங்கை கடற்படை அட்டூழியம்