×

வங்கக் கடலில் செப்.30ம் தேதி புதிதாக குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

டெல்லி: வங்கக் கடலில் செப்.30ம் தேதி புதிதாக குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வடக்கு அந்தமான், அதை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

மேற்குதிசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக வடதமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் சென்னை, தருமபுரி, செங்கல்பட்டு, காஞ்சி, ராணிப்பேட்டை, விழுப்புரம், திருவண்ணாமலை, சேலம், கோவை, கிருஷ்ணகிரி இன்று ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேலும் நாளை முதல் 29ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

அடுத்த 3 மணி நேரத்தில் தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், சேலம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மற்றும் ராமநாதபுரம் 8 ஆகிய மாவட்டங்களில் லேசான இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதையடுத்து வங்கக் கடலில் செப்.30ம் தேதி புதிதாக குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வடக்கு அந்தமான், அதை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

The post வங்கக் கடலில் செப்.30ம் தேதி புதிதாக குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Bengal Sea ,Meteorological Inspection Centre ,Delhi ,Meteorological Research Center ,
× RELATED அந்தமான் அருகே மிதமான நிலநடுக்கம்!